இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி விளையாடி வந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் தற்போது நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வந்தது. முதல் இன்னிங்ஸ் முடியவே நான்கு நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில், இறுதி மற்றும் ஐந்தாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.
அந்த அணித்தரப்பில், மேத்யூ 6 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து வெளியேற, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டார்விஸ் 90 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. மேலும், இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எலிகளில் இருந்து கொரோனா பரவலா? – அதிர்ச்சி தகவல்..