ஒக்கேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பால் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், ஒக்கேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவரப்படி ஒக்கேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து, தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலு காவிரி நீர்வரத்து பகுதியில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒக்கேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன்காரணமாக, ஒக்கேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்க கூடாது எனவும், ஆற்றில் இறங்க கூடாது எனவும், ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப்பரப்பில் தமிழகம் சாதனை