Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவாத்தியாரே இப்படியா ? பள்ளிக்குள் பட்டா கத்தியுடன் வளம் வந்த ஆசிரியர்! அதிர்ச்சி வீடியோ

    வாத்தியாரே இப்படியா ? பள்ளிக்குள் பட்டா கத்தியுடன் வளம் வந்த ஆசிரியர்! அதிர்ச்சி வீடியோ

    கத்தியுடன் பள்ளி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த தலைமை ஆசிரியர் பணியீடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    அசாம் மாநிலம், சச்சார் மாவட்டத்தில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தத் தொடக்க பள்ளியில் ஒருவர் பட்டா கத்தியுடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சச்சார் மாவட்டத்தின் கல்வியல் அதிகாரிகள் பள்ளியை கண்டறிந்து விசாரணை நடத்தினர்.

    அந்த விசராணையின்போதுதான் தெரிந்தது, வைரலான வீடியோவில் இருந்தது அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரிதிமேதா தாஸ் என்பது. இவர் அடையாளம் காணப்பட்டவுடன், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்வதாக அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. 

    இச்சம்பவம் குறித்து 11 வருடங்களாக ஒரே பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கும் திரிதிமேதா தாஸிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர்களை மிரட்டும் நோக்கிலேயே கத்தியுடன் வலம் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    மேலும், கைது குறித்து கேள்வி எழுப்புகையில் யாரும் இவர் மீது இதுவரையில் புகார் அளிக்காததால் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: குறைந்து வரும் கொரோனா: இந்தியாவில் 625 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....