Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுநெருக்கடியான சூழலில் 'தல' தோனி எனக்கு அனுப்பிய மெசேஜ்? மனம் திறந்த விராட் கோலி

    நெருக்கடியான சூழலில் ‘தல’ தோனி எனக்கு அனுப்பிய மெசேஜ்? மனம் திறந்த விராட் கோலி

    தோனி தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பல நாட்களுக்கு பிறகு தற்போது விராட் கோலி  மனம் திறந்துள்ளார்.

    விராட் கோலி காப்பதன் பதிவிலிருந்து விலகியபோது தோனி மட்டுமே அவரைத் தொடர்பு கொண்டு பேசியதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி அப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். 

    அதேபோல், அப்போது விராட் கோலி ஆட்டத்திலும் சரியாக கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. ஆனால், தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை அவர் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருந்ததற்கு காரணமாக தற்போது தோனி அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பேசியுள்ளார். 

    சமீபத்தில் அவர் தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர், “என்னிடம் உண்மையாக வந்த ஒரே நபர் எம்.எஸ்.தோனி மட்டும்தான். என்னைப் பொறுத்தவரையில், என்னைவிட மூத்தவராக இருக்கும் ஒருவருடன் இவ்வளவு வலுவான பிணைப்பும், வலுவான உறவையும் பெற்றிருப்பது ஆசிர்வாதம் ஆகும். இது பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்த நட்பாகும்” என தெரிவித்துள்ளார். 

    தோனி குறிப்பிட்டுள்ள ஒரு குறுஞ்செய்தியில், “நீங்கள் மன வலிமையானவராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், நீங்கள் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும், தனிப்பட்ட அளவில் வலுவாக இருப்பது போன்ற தோற்றத்தை கொடுத்துவிட்டால் நீங்கள் எப்படி உள்ளீர்கள் என்பதை அவர்கள் கூட மறுத்துவிடுவார்கள் என்று தோனி எனக்கு அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

    மேலும் விராட் கோலி, “நான் எப்போதும் மிகவும் நம்பிக்கையோடும் மன வலிமையோடும், எந்த எந்த சூழ்நிலையையும் சகித்து வழிக் காட்டக்கூடிய ஒருவராகவே பார்க்கப்படுகிறேன். சில சமயங்களில் வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் நீங்கள் இரண்டு படிகள் பின்வாங்கி, நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....