Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசிறந்த வீராங்கனையாக இந்திய வீராங்கனை தேர்வு...ஐசிசி வெளியிட்ட பட்டியல்!

    சிறந்த வீராங்கனையாக இந்திய வீராங்கனை தேர்வு…ஐசிசி வெளியிட்ட பட்டியல்!

    செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் வாரியமான (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை ஐசிசி அறிவித்துள்ளது. 

    முன்னதாக, சிறந்த வீரரை தேர்ந்தெடுக்க மூன்று வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரை செய்தது. இதில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

    இதையும் படிங்க: கிரிக்கெட்டில் சாதித்த தோனி…இதிலும் சாதிப்பாரா?

    இவர்கள் மூவரில் ஊடக பிரதிநிதிகள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பர். அந்த வகையில் இன்று ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. 

    அதன்படி, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

    இதேபோல், பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....