சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர் அடித்து சாதனை படைத்தார்.
இந்தியாவில் 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் காலிறுதி ஆட்டம் தற்போது ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச அணி – மஹாராஷ்டிரம் அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிர அணி பேட்டிங்கில் களம்கண்டது.
இந்நிலையில், மஹாராஷ்டிர அணி சார்பில் அந்த அணியின் கேப்டனும், ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வீரருமாகிய ருதுராஜ் கெயிக்வாட், இன்றைய ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்து அசத்தினார். மொத்தத்தில் மஹாஷ்டிர அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது.
இதில், 159 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 220 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். இன்றைய ஆட்டத்தின்போது, சுழற்பந்து வீச்சாளர் ஷிவா சிங் வீசிய 49-வது ஓவரில் 7 சிக்ஸர்களைத் தொடச்சியாக அடித்து சாதனை படைத்தார் ருதுராஜ்.
அந்த 49-ஆவது ஓவரில் ஒரு நோ பால் வீசப்பட்டதால் 7-வது சிக்ஸரை அடிக்கும் வாய்ப்பு ருதுராஜுக்குக் கிடைத்தது. ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த சாதனைக்கு கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
புரோ கபடி: போராடி குஜராத்தை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்