Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇணையத்தில் பரவிய உல்லாச புகைப்படம்: உயர் அதிகாரிகளுக்கு பரந்த புகார் மனுவால் பரபரப்பு..

    இணையத்தில் பரவிய உல்லாச புகைப்படம்: உயர் அதிகாரிகளுக்கு பரந்த புகார் மனுவால் பரபரப்பு..

    பெண் காவல் ஆய்வாளருடன் துணை காவல் கண்காணிப்பாளர், உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர், தமிழக முதல்வர் , மாநில மனித உரிமைகள் ஆணையம், மத்திய மண்டல ஐ.ஜி அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களுக்கு மனு அனுப்பியுள்ளார். 

    அப்படி அனுப்பட்டிருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவர், பெண் காவல் ஆய்வாளருடன் உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையின் வாட்ஸ் அப் குழுவில் பரவியது. அதன்பிறகு, சில வினாடிகளில் அந்த ஆபாசப் புகைப்படம் வாட்ஸ்அப் குழுவில் இருந்து அழிக்கப்பட்டது.

    இதையும் படிங்க:தொடர்ந்து தோல்வி பாதையில் ஈஸ்ட் பெங்கால்…முன்னேற்றத்தில் கோவா!

    தற்போது அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் குறித்து ஏற்கனவே, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

    மேலும், புகாருக்குள்ளான துணை காவல் கண்காணிப்பாளர் பெண் காவலர்கள் பலருக்கும் தவறான நோக்கத்தில் ஆபாசப் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதேநேரம், சில முக்கிய பிரமுகர்களின் ஆதரவால் அவர், தன் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் பார்த்து கொள்கிறார். அதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....