ஒக்கேனக்கல் அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூன்றாவது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த சில நாள்களாகவே தென்மேற்கு பருவ மழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் ஒட்டியபடி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒக்கேனக்கலுக்கு வந்துக்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, ஒக்கேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மெயின் அருவி, சீனிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒக்கேனக்கல் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 3-வது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கு விரைவில் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல்