கடந்த 122 ஆண்டுகளில் 3-வது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாகியுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 122 ஆண்டுகளில் 3-வது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1906-ம் ஆண்டில் மட்டும் 112 செ.மீ. மழையும், 1909-ம் ஆண்டு 127 செ.மீ. மழையும் இதுவரை பதிவானது. இதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டிலும் இதுவரை 93 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம், கடந்த 122 ஆண்டுகளில் ஆண்டுகளில் 3-வது முறையாக அதிகப்படியான மழையளவு இந்த ஆண்டும் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவ மழையின் அளவு 40 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் இயல்பான மழைப்பொழிவு 21 செ.மீ. ஆகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!