Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநள்ளிரவு தொடங்கி கொட்டி தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

    நள்ளிரவு தொடங்கி கொட்டி தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காரைக்கால், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

    கனமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....