நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 8) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உத்தரவிட்டுள்ளார்.
இயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகரிக்கும் யுக்திகள்