நடிகை த்ரிஷா திருமணம் குறித்து கேள்வி கேட்டதற்கு பதிலளித்துள்ளார்.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் திரைப்படம் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன்.
இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளிவந்தது. பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக செண்டை மேளங்களுடனும், ரசிகர்களின் ஆடல்பாடலும் இடம்பெற்றிருந்தது. மேலும், திரைப்படம் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க:‘தமிழ் மொழி திராவிடத்தை நம்பி இல்லை; கட்சியை காப்பாற்றும் வேலையை மட்டும் பாருங்கள்’ – அண்ணாமலை
இந்நிலையில், பொன்னியின் செல்வன் புரோமஷன்களில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டு வந்தார். குந்தவையாக த்ரிஷா பலரையும் கவர்ந்துள்ளார். 96 ஜானுவுக்குப் பிறகு அதிகளவு பேசப்பட்ட த்ரிஷாவின் கதாப்பாத்திரமாக குந்தவை காதாப்பாத்திரம் உள்ளது.
இதனால், மிகவும் ஆனந்தத்தில் உள்ள த்ரிஷாவிடம் கல்யாணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கடமைக்காக திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து செய்து கொள்ள விரும்பவில்லை. நண்பர்கள் உட்பட தனக்கு தெரிந்த பலர், மகிழ்ச்சியான திருமணத்தில் இருப்பதாகவும் சிலர் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து செய்ய நினைக்கின்றனர் என்றும் கூறினார்.
மேலும், ‘சரியான நபரை இதுவரை சந்திக்கவில்லை’ என்றும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.