Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்19 வருடங்களுக்கு பிறகு வியந்த ஹாரிஸ் ஜெயராஜ்.... நா.முத்துகுமார் செய்த சம்பவம் அப்படி!

    19 வருடங்களுக்கு பிறகு வியந்த ஹாரிஸ் ஜெயராஜ்…. நா.முத்துகுமார் செய்த சம்பவம் அப்படி!

    19 வருடங்களுக்கு பிறகு நா.முத்துகுமாரின் பாடல் வரியை கண்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வியந்துள்ளார். 

    தமிழ் பாடல் பிரியர்களிடத்தில் தனது எளிமையால் தனி இடம்பிடித்தவர், நா.முத்துகுமார். தற்போது இவர் நம்மிடத்தில் இல்லை என்றாலும் இவரது பாடல்கள் தினந்தோறும் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றன.

    சமீபத்தில் கூட இவரின் பாடல்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி அங்கீகாரம் செய்தது. 2003-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் சாமி. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ்  பணியாற்றியிருப்பார். இன்றளவும் சாமி திரைப்படத்தின் பாடல்கள் பிரபலமானவை. இத்திரைப்படத்தில் நா. முத்துக்குமார் ‘திருநெல்வேலி அல்வாடா’ எனும் பாடலை எழுதியிருப்பார். திருநெல்வேலிக்கே உரித்தான சிறப்பியல்புகளால் அப்பாடலின் வரிகள் நிறைந்திருக்கும். 

    இந்நிலையில், ட்விட்டரில் ஒருவர் சாமி திரைப்படத்தின் ‘திருநெல்வேலி அல்வாடா’ எனும் பாடலில் வரும் ‘பாளையங்கோட்டை ஜெயிலு பக்கம் ரயிலு கூவும்’ என்ற வரியை குறிப்பிட்டு, பாளையங்கோட்டை  சிறைக்கு அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயில் செல்லும் காணொளியை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். 

    இதைக்கண்ட, ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பதிவில் இதுவரை இந்த விஷயம் எனக்கு தெரியாதே என தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் ரெய்டு! ஜிஎஸ்டியால் வந்த சிக்கல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....