Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தொழிலதிபரை மணமுடித்த நடிகை ஹன்சிகா; வைரலாகும் புகைப்படங்கள்..

    தொழிலதிபரை மணமுடித்த நடிகை ஹன்சிகா; வைரலாகும் புகைப்படங்கள்..

    நடிகை ஹன்சிகாவுக்கும், தொழலதிபர் சோகேலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. 

    தமிழ் திரையுலகால் சின்ன குஷ்பூ என கொண்டாடப்பட்ட நடிகைதான், ஹன்சிகா மோத்வானி. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக இவர் விளங்கி வந்தார். 

    தற்போது, ஹன்சிகா மோத்வானி தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளிவந்த எந்தி திரைப்படமும் ரசிகர்களிடத்தில் பெரிய ஆதரவை பெறவில்லை. இனி இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுமென்ற நம்பிக்கையில் ஹன்சிகா உள்ளார். 

    இந்நிலையில்தான், தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாகவும் இத்திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து எந்தவித தகவலும் ஹன்சிகா தரப்பிலிருந்து வெளிவராமல் இருந்தது. 

    ஆனால், சமீபத்தில் ஹன்சிகா தன் வருங்கால கணவரை அறிமுகப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டார். அப்பதிவில் ‘இன்றும், என்றென்றும்’ என்று பதிவிட்டிருந்தார். புகைப்படத்தில் சோகேல் ஹன்சிகாவிற்கு காதலை தெரிவிப்பதாகவும், அவர் அந்த காதலை ஏற்பதாகவும் இருந்தது. 

    மேலும், சோகேல் மற்றும் ஹன்சிகாவிற்கு டிசம்பர் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், இன்று நடிகை ஹன்சிகாவுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    சோகேல் மற்றும் ஹன்சிகா  திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. 

    ‘ஒழுக்கத்தை விட்டோம்..எல்லாம் நாசமா போயிடும்’ – வெளிவந்த பகாசூரன் டிரெய்லர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....