புரோ கபடி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உ பி யோதாஸ் அணி வெற்றிப்பெற்றது.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் குஐராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான் மற்றும் உ பி யோதாஸ் ஆகிய அணிகள் மோதின.
இந்த ஆட்டங்களில் உ பி யோதாஸ் அணி 45-41 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, குஐராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற 51-51என்ற புள்ளி கணக்கில் அந்த ஆட்டம் டை ஆனது.
மேலும், இன்று இரவு நடைபெறவுள்ள புரோ கபடி போட்டியில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் மற்றும் யு மும்பா, பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் களம் காண்கின்றன.
ஆளுனர் இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்! அன்புமணி ராமதாஸ்