புதுச்சேரி துறைமுகத்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணிக்கு வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் துறைமுகத்துறையில் 4 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்த மாதம் 12-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . 4 இடங்களில் 2 பொதுப்பிரிவினருக்கும், தலா ஓரிடம் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அட்டவணை இனத்தவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் சேர மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். பட்டயபடிப்பு முடித்தோர் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும். வயது வரம்பு 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை https://recruitment.py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 11-ந். தேதி ஆகும்.
“தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்”- தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்