Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதுறைமுகத்தில் சூப்பர் வேலை காத்திருக்கிறது; இந்த வாய்ப்பை தவற விடாதீங்க

    துறைமுகத்தில் சூப்பர் வேலை காத்திருக்கிறது; இந்த வாய்ப்பை தவற விடாதீங்க

    புதுச்சேரி துறைமுகத்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணிக்கு வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி அரசின் துறைமுகத்துறையில் 4 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்த மாதம் 12-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . 4 இடங்களில் 2 பொதுப்பிரிவினருக்கும், தலா ஓரிடம் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அட்டவணை இனத்தவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியில் சேர மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். பட்டயபடிப்பு முடித்தோர் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும். வயது வரம்பு 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும்.

    இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை https://recruitment.py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 11-ந். தேதி ஆகும்.

    “தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்”- தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....