Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜிஎஸ்டி: விலை உயரும் அத்தியாவசிய பொருள்கள்

    ஜிஎஸ்டி: விலை உயரும் அத்தியாவசிய பொருள்கள்

    அரிசி மற்றும் தானியங்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத சரக்கு மற்றும் சேவை
    வரி இன்று (ஜூலை 18) முதல் அமலுக்கு வருகிறது.

    ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற 47- வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தவும், சில
    பொருள்களுக்கு வரியைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி மாற்றம்
    இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    ஜிஎஸ்டி உயர்வு காரணமாக விலை உயர வாய்ப்புள்ள பொருள்கள்: அச்சு பிரதி, எழுத
    அல்லது வரைவதற்கு பயன்படும் இங்க், வெட்டும் கத்திகள், பென்சில் ஷார்ப்னர்,
    கரண்டிகள், விளக்குகள், வரைவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவீதம்
    ஜிஎஸ்டி இருந்தது. இது தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

    காசோலைகள் வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துக்கு 18 சதவீத
    ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ,
    சுத்திகரிப்பு ஆலைகள், மயான கட்டுமான பணி ஒப்பந்தங்களுக்கான ஜிஎஸ்டி, 12
    சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

    ரிசர்வ் வங்கி, செபி போன்ற ஒழுங்கு நடைமுறை அமைப்புகளின் சேவைகளுக்கு 18
    சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. மேலும், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களுக்கு மற்றும் தயிர், பன்னீர் போன்ற பொருள்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

    உயிரி மருத்துவ கழிவு சுத்தீகரிப்பு அமைப்புகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி
    விதிக்கப்பட உள்ளது. ரூ.1000க்கும் குறைவாக ஒருநாள் வாடகை கொண்ட ஹோட்டல்
    அறைகள், அட்லஸ், போன்ற வரைபடங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட
    உள்ளது.

    சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்களுக்கு முன்னதாக 5 சதவீதம்
    ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது 12 சதவீதமாக உயர்த்தப்பட
    உள்ளது.

    இதுபோல ஒரு சில பொருள்களுக்கும் வரி குறைப்பும் செய்யப்பட்டுள்ளது. சரக்கு
    மற்றும் சாலை போக்குவரத்து வாகனங்களுக்கான ஜிஎஸ்டி, 12 சதவீதத்தில் இருந்து
    5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளை
    வாடகைக்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுவந்த 18 சதவீத ஜிஎஸ்டி, 12 சதவீதமாக
    குறைக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பக்தோக்ரா நகரத்தில்
    இருந்து விமானத்தில் எக்கனாமி வகுப்பில் பயணிப்பதற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு
    அளிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாகனங்கள், பேட்டரி பொருத்தப்பட்ட அல்லது பொருத்தப்படாமல்
    இருந்தாலும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவீத சலுகை பெற தகுதி
    அளிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.44 லட்சம் கோடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....