Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைராஜிநாமா செய்து தப்பி ஓடினாரா கோத்தபய ராஜபக்சே?

    ராஜிநாமா செய்து தப்பி ஓடினாரா கோத்தபய ராஜபக்சே?

    கோத்தபய ராஜபக்சே தனது இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதத்தில் கையொப்பமிட்டே பிறகே  இலங்கையை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கே மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

    கடந்த சனிக்கிழமை, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். 

    இதையடுத்து, நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

    இதன்படி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

    இச்சூழலில், இலங்கை ராணுவ விமானத்தின் மூலம் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறும் முன்பு, ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டு சென்றதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த ராஜிநாமா கடிதம் குறித்து இன்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் தப்பியோட்டம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....