உடல் நலக்குறைவு காரணமாக சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகரும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஜி.கே. மணி அவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு அவ்வப்போது செரிமான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜி.கே. மணி கறி விருந்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் செரிமான பிரச்சனையால் அவதிக்குள்ளாகி வந்துள்ளார்.
அவருக்கு தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், அவர் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், ஜிகே மணி அவர்களின் உடல் நலம் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியின் வாயிலாக நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:6 பேர் விடுதலை: 30 ஆண்டுகால போராட்டத்திற்கும்., மனித உரிமைக்கும் கிடைத்த வெற்றி..! மு க ஸ்டாலின்