Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇரண்டாம் சுற்றுக்குத் தகுதியான இருவர் - ஜெர்மன் ஓபன் பேட்மிட்டன்

    இரண்டாம் சுற்றுக்குத் தகுதியான இருவர் – ஜெர்மன் ஓபன் பேட்மிட்டன்

    முல்கேம் அண்டர்ரூ நகரில் நேற்று ஜெர்மன் ஓபன் பேட்மிட்டன் போட்டி நேற்று தொடங்கி வருகிற 13 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைப்பெற உள்ளது. 

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 48 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் கிடம்பி ஸ்ரீகாந்த் 21-10  13-21  21-7 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சு நாட்டின்  பிரைஸ் லிவெர்டெஸ்சுடனை வென்றார். ஸ்ரீகாந்த் உலக போட்டியில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ரீகாந்த் அடுத்தப் போட்டியில் சீனாவின் லூ குயாங் சுவை எதிர்க்கொள்வார் எனத் தெரிகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 32 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் பி வி சிந்து 21-8 21-7  என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 11- ஆவது இடத்தில் உள்ள தாய்லாந்தைச் சேர்ந்த பூசனன் ஓங்பாம்ருங்பானை வீழ்த்தி வெற்றி பெற்றார். மேலும் 15 – ஆவது முறையாக அவரை வீழ்த்தி புதுச் சாதனையும் படைத்துள்ளார். பி வி சிந்து ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றவர் என்பது sindhu and sreekanth குறிப்பிடத்தக்கது. சிந்து தனது அடுத்தப் போட்டியில்  சீனாவின் சாங்-இ-மான் அல்லது பீட்ரிஸ் கொரேல்சை எதிர்க்கொள்வார் எனத் தெரிகிறது.

    ஸ்ரீகாந்த், சிந்து ஆகிய இருவரும் அடுத்தச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....