Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்தொடர் குண்டு மழை பொழியும் உக்ரைனில் புதியதாய் மலர்ந்த காதல்! - உலக மக்கள் வாழ்த்து!

    தொடர் குண்டு மழை பொழியும் உக்ரைனில் புதியதாய் மலர்ந்த காதல்! – உலக மக்கள் வாழ்த்து!

    ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் போர் பதற்ற நிலையே கடந்த இரு வாரங்களாக நிகழ்ந்து வருகிறது. உக்ரைனில் எந்த பக்கம் நோக்கினாலும் போர் சூழல்களே நிலவி வருகிறது. போர் நடைபெறாத பகுதிகளில் கூட போர் குறித்தானவைகளும், இராணுவ கட்டுப்பாடுகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. உக்ரைன் மக்கள் தங்களின் இயல்பான அன்றாட வாழ்வை மறந்து இரு வாரங்களாயிற்று.

    war

    நடந்துக்கொண்டிருக்கும் போரும் ஓய்வதாய் இல்லை. சமரசம் என்ற ஒன்றே நிகழாது என்பதைப் போல இப்போர் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. உலக நாடுகளும் இப்போரை நிறுத்த முடிந்த அளவு முயற்சித்த வண்ணமே உள்ளனர். உலக மக்கள் விரைவில் இப்போர் நின்றுவிட வேண்டுமென்று பிராத்தித்தும் விருப்பப்பட்டும் வருகின்றனர். தொடர் துயரங்கள் மட்டுமே நிகழ்ந்துக்கொண்டிருக்க உக்ரைனில் ஒரு சிறிய பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    love

    இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்ற வரியைப்போல, உக்ரைனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலும் காணும் அனைவரையும் கவரும் வண்ணம் ஒரு காதல் அரங்கேறியுள்ளது. ஆம்! உக்ரைனிய ராணுவ வீரர்கள் ஒரு மகிழுந்தை சோதனைச் செய்ய அப்போது ராணுவ வீரர்களில் ஒருவர் அம்மகிழுந்தில் வந்த பெண் ஒருவருக்கு தன் காதலை தெரிவிக்கிறார். அப்பெண்ணும் இவரின் காதலை ஏற்றுக்கொள்கிறார். 

    இந்த நிகழ்வின் காணொளியானது இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டும் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டும் வருகிறது. மேலும் இக்காதல் ஜோடிக்கு உலக மக்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....