அண்ணாமலையை ஒரு முறை நேர்காணல் செய்ய விரும்புவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக விளங்கி வந்தார். கடந்த நவம்பர் மாதம் ‘பாஜக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததால், காயத்ரி ரகுராம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்’ என்று அண்ணாமலை அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகுவதாக கடந்த 3-ஆம் தேதி அறிவித்தார். மேலும், ‘அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை.’ என்று தெரிவித்தார்.
இத்துடன், அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும், அண்ணாமலை மலிவான, பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர் என்றும், நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். என்னால் அவரது தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன். கட்சியை விட்டு செல்பவர்கள் வாழ்த்திதான் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணாமலையை ஒரு முறை நேர்காணல் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரின் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது;
அண்ணாமலை என்னை எதிர்கொள்ள தயாரா? உண்மையை உலகம் அறிந்து கொள்ளட்டும். எனக்கு உங்களின் வாழ்த்து தேவையில்லை. என்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு மட்டுமே தேவை. அதுமட்டுமல்லாமல், நான் ராஜினாமா செய்யும் முடிவை எடுப்பதற்கு முன் நீங்கள் ஒருமுறை கூட என்னை வாழ்த்தியதில்லை.
என்று தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை; சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல்..