கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சரான ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு துறையின் வாயிலாக 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது பரிசோதனை முறையில், சென்னை திருவல்லிக்கேணியில் இன்னும் ஒரு வார காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு சொசைட்டி மூலமாக சாலையோர கடைகளுக்கு ஒருவாரத்தில் கேஸ் சிலிண்டர்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ‘இன்புளூயன்சா காய்ச்சல்’ சுகாதாரத் துறை தகவல்.