Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉல்லாசம்.. பிளாக் மெயில்.. முக்கிய புள்ளிகளை அலற விட்ட மோசடி ராணி சிக்கியது எப்படி?

    உல்லாசம்.. பிளாக் மெயில்.. முக்கிய புள்ளிகளை அலற விட்ட மோசடி ராணி சிக்கியது எப்படி?

    ஒடிசாவில் பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் காட்டி பணம் பறித்த அர்ச்சனா நாக் என்ற 26 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். 

    ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார். அந்தப்பெண்  நான்கே ஆண்டுகளில் 30 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. 

    அர்ச்சனா சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் என சமூகத்தில் மிக பிரபலமானவர்களைக் குறிவைத்து அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். 

    அதுமட்டுமின்றி, அவர்களுடன் தனியாக அறையிலிருந்தபோது அதனை மிக ரகசியமாக காணொளியாக பதிவு செய்துள்ளார். 

    இதையும் படிங்க: ‘உயிர் சாவில் முடிவதில்லை, கலை சாவை மதிப்பதில்லை’-ஹாரிபாட்டர் நடிகரின் மறைவால் உருகும் ரசிகர்கள்!

    அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பழைய கார்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக அரசியல்வாதிகள், பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அர்ச்சனா நன்றாக தெரிந்துகொண்டார். இதன்மூலம் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நட்பாக பழகியதுடன், அவர்களுக்கு பெண்களை அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

    அப்படி பிரபலங்கள் அந்தப் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

    இதன் பின்னர், அர்ச்சனா தான் எடுத்த புகைப்படங்களையும் காணொளிகளையும் அவர்களிடம் காட்டி பணம் பறித்துள்ளார். அர்ச்சனாவின் இந்த குற்றங்கள் அனைத்திற்கும் அவரது கணவர் ஜகபந்து உடந்தையாக இருந்தது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    காவல்துறையினர் அவரை கைது செய்து புவனேஸ்வரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளது. 

    இந்த மென்பொருள்களை வைத்து ஆய்வு செய்தபோது, பல முக்கிய பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் காணொளிகள் சிக்கியுள்ளன. 

    18 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனாவின் வலையத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் என பாஜக புவனேஸ்வர் பிரிவுத் தலைவர் பாபு சிங் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிஜேடி கட்சி மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: நாட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பது ஏன்? – ராகுல் கேள்வி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....