Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தன் குடும்பத்தின் வணிக ரீதியான செயல்பாடுளால்தான் தி.மு.க. இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ? - ஓபிஎஸ்...

    தன் குடும்பத்தின் வணிக ரீதியான செயல்பாடுளால்தான் தி.மு.க. இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ? – ஓபிஎஸ் காரசார கேள்வி!!

    “இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த இலட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும், பலத்துடன் கூடி இல்லையென்றால் வெற்றி பெற முடியாது” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். ஆனால், இதற்கு மாறான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது என தன் அறிக்கையை ஆரம்பித்தார், ஓ.பன்னீர் செல்வம். 

    அதன்பிறகு அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசும், காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் கர்நாடக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொல்லைகள் கொடுத்து வருகின்றன எனவும் தெரிவித்தவர், 

    முல்லைப் பெரியாறு அணை என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அணையாகும் எனவும் இதனைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் கேரள அரசின் அண்மைக்கால நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    அதோடு, கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணைச் சார்ந்த செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார். 

    மேலும், ‘கேரள அரசின் செயல்பாடு இப்படி என்றால், கர்நாடக அரசின் செயல்பாடு இதைவிட மோசமாக இருக்கிறது என்றும் அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்றும், தேவைப்பட்டால் மாண்புமிகு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திப்போம் என்றும் கர்நாடக முதலமைச்சர் கூறியதை நினைவுக்கூர்ந்துள்ளார், ஓ.பன்னீர் செல்வம்.  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடாக அரசுக்கு கடும் கண்டனத்தையும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பதிவு செய்தார்.

    “தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி பிரச்சனை குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளாவுடன் தி.மு.க. குடும்பத்திற்கு வணிக ரீதியான செயல்பாடுகள் இருப்பதால், தி.மு.க. இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது” என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுவதால், தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் திறக்காமல் இருக்கின்றனவோ, கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி பேசாமல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளதை தன் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

    இறுதியாக, எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது என்ற வாசகங்களை மனதில் நிலைநிறுத்தி, முல்லைப் , பெரியாறு மற்றும் காவேரி நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட ஏதுவாக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி கேரள, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து ஒற்றுமையாக குரல் கொடுத்து, தமிழ்நாட்டின் பலத்தை பறைசாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....