Wednesday, May 1, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'இராவண கோட்டம்' - வெளியான முதல் பாடல்..

    ‘இராவண கோட்டம்’ – வெளியான முதல் பாடல்..

    நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ‘இராவண கோட்டம்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

    ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல பெயரை பெற்றவர்  விக்ரம் சுகுமாரன். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம்தான்,  ‘இராவண கோட்டம்’. 

    இப்படத்தில் நடிகர் சாந்தனு, நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்க வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதி செய்துள்ளார்.

    மதயானைக்கூட்டம் பெற்ற படத்தின் வரவேற்பு காரணமாக, இராவண கோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே உள்ளது. 

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலாக ‘அத்தன பேர் மத்தியில’ பாடல் வெளியாகியுள்ளது. முன்னனி நடிகைகளுள் ஒருவரான கீர்த்தி சுரேஷ் இப்பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடல் தற்போது ரசிகர்கள் தற்போது கண்டுகளித்து வருகிறது. 

    மேலும், இப்பாடலுக்கான வரிகளை 96 படப் பாடல்களை எழுதிய கார்த்திக் நேத்தா எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ‘இதுதான் எனது பெஸ்ட்’ – அனிருத் உணர்ச்சிவசம்; வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....