தென்னாப்பிரிக்காவின் ரில்லி ரூசோவ் 2022 இருபது ஓவர் உலகக் கோப்பையின் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற 8 அணிகள் ஏற்கனவே சூப்பர்-12 சுற்றுக்கு தகுதிப்பெற்றிருந்தன.
இந்நிலையில், மீதமுள்ள 4 அணிகளுக்காக 8 அணிகள் மோதின. இந்நிலையில், தகுதிச்சுற்றில் விளையாடிய 8 அணிகளில் இருந்து, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து போன்ற அணிகள் தகுதிப்பெற்றன. இந்த பன்னிரண்டு அணிகள் இரு குழுவாக பிரிக்கப்பட்டு சூப்பர்-12 சுற்றுகள் தொடங்கின.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டம்; மீண்டும் டாப் 10 க்குள் நுழைந்த விராட்!
இந்நிலையில், இருபது ஓவர் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் தென்னாப்பிரிக்காவும் வங்கதேசமும் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பேட்டர் ரூசோவ் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் சதமடித்து, தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த இருபது ஓவர் உலகக் கோப்பையின் 10-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து 19-வது ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தபோது ரூசோவ் ஆட்டமிழந்தார். அதேபோல், தொடக்க ஆட்டக்காரர் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்துள்ளார். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி குவித்தது. இதைத்தொடர்ந்து, வங்கதேச அணி மாபெரும் இலக்கை நோக்கி களமிறங்க, 101 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆகி தென்னாப்பிரிக்க அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.