திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், இந்து முன்னணியின் கலை மற்றும் பண்பாட்டு பிரிவின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், கனல் கண்ணன் சமீபத்தில் இந்து முன்னணியின் கலை மற்றும் பண்பாட்டு பிரிவின் சார்பாக, சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ”இந்துவாக இருப்பதே மிகப்பெரிய பெருமை. ஒரு காலத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு மதமாற்றம் முடித்தார்கள். ஆனால் இப்போ மதமாற்றம் என்ற முறையில் நாடுகளை பிடிக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் தரிசனம் செய்கின்றனர். அப்படி, தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்று கனல் கண்ணன் பேசியுள்ளார்.
கனல் கண்ணின் இந்த பேச்சுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வெளியே பெரியாரின் சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று திடீர் சோதனை