திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே சட்டவிரோதமாக இயங்கிவரும் கற்குவாரியை மூடக்கோரி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று (ஆகஸ்ட்-30) தொடங்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கி பாளையம் கந்தையக்காட்டைச் சேர்ந்தவர், விவசாயி விஜயகுமார். இவர் தனது தோட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்.
இது குறித்து விவசாயி விஜயகுமார் கூறியதாவது:
எங்களது தோட்டத்துக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான கற்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியானது கனிமவளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளையும், நிபந்தனைகளையும் மீறி சட்டவிரோதமாக இயங்கி வருகிறது.
இதுதொடர்பாக பலவேறு முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்த கற்குவாரிக்கு புதியதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கற்குவாரிக்காக அனுமதியை ரத்து செய்து குவாரியை மூடும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளேன்
இவ்வாறாக அவர் கூறினார்.
கூகுள் மேப் பார்த்தபடி சென்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்