Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமுடியப்போகும் சகாப்தம்.. தனது கடைசி போட்டியில் பிரபல டென்னிஸ் வீரர்

    முடியப்போகும் சகாப்தம்.. தனது கடைசி போட்டியில் பிரபல டென்னிஸ் வீரர்

    டென்னிஸ் விளையாட்டில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் தொழில்முறை டென்னிஸிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

    சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், சில நாட்களுக்கு முன்பு தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். 

    அதன்படி, பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். லண்டனில் இன்று லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில், ரோஜர் ஃபெடரர் தனது கடைசி ஆட்டத்தை ஆடுகிறார்.

    இந்த போட்டியானது, இந்திய நேரப்படி, இன்று மாலை 5 மணியளவில்  தொடங்குகிறது. உலக அணியில் இடம் பெற்றுள்ள ரோஜர் ஃபெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட உள்ளார். 

    இந்த தொடருடன் ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஆம்லெட்டில் ஸ்டைலாக ”ஃபிளிக் ஷாட்” அடித்த சச்சின் – இன்ஸ்டாவில் இப்ப இதான் ட்ரெண்டிங்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....