Monday, May 13, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தி மீதான நடவடிக்கை; ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் கவனிப்பு..

    ராகுல் காந்தி மீதான நடவடிக்கை; ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் கவனிப்பு..

    ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம் என ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    கடந்த 2019-ஆம் ஆண்டு  மோடி பெயரை அவரின் சமூகம் சார்ந்து பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    இதனால் சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளது. 

    இந்த மேல்முறையீட்டில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை திரும்ப பெறுவார். இதுவே, தடை விதிக்கப்படாமல் இருந்தால் ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை செல்ல நேரும். அதேநேரம், சிறைத்தண்டனைக்கு பிறகு ஆறு ஆண்டுகாலம் எந்தவித பொது தேர்தலிலும் பங்குபெற முடியாத நிலை ராகுல் காந்திக்கு ஏற்படும். மொத்தம் அவருக்கு 8 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடாமல் போகும் நிலைமை வரலாம் என சட்ட நிபுணர்கள் கணித்துள்ளனர். 

    இப்படியான சூழல்கள் நிறைந்திருக்க, ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ராகுல் காந்தியின் பதவியிழப்பு குறித்தும், அவர் மீதான நடவடிக்கை குறித்தும் பேசினார். 

    அப்போது, அவர் பேசியதாவது;

    ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் நாங்கள் கவனித்தோம். எங்கள் புரிதலின்படி, ராகுல் காந்தி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. 

    அதனால், அந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு வந்தபின்னரே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா என்பதெல்லாம் தெளிவாகும். அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். 

    இவ்வாறு பேசினார். 

    முன்னதாக, ராகுல் காந்தி விஷயம் குறித்து உற்றுநோக்கி வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    மாவீரன் படத்தின் அப்டேட்.. ‘டாட்டா’ காட்டும் சிவகார்த்திகேயன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....