சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சென்னையில் இன்று (ஆகஸ்ட்-5) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையானது 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சில முக்கிய பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை சோதனை குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவைகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மேலும் 6 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்