Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஆனால், வால்பாறை, கொல்லிமலையில்?

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஆனால், வால்பாறை, கொல்லிமலையில்?

    நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாகவே தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. 

    தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கனமழை காரணமாக  இன்றுடன் மூன்றாம் நாளாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் கனமழை காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் சமீரின் உத்தரவிட்டுள்ளார். 

    அதேபோல், தொடர் கனமழை காரணமாக, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....