நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாகவே தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கனமழை காரணமாக இன்றுடன் மூன்றாம் நாளாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் சமீரின் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், தொடர் கனமழை காரணமாக, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்