எலான் மஸ்க் ட்விட்டர் தலைவர் பொறுப்பில் இருப்பதை , 57.5 சதவிகித பயனர்கள் விரும்பவில்லை.
எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சம்பவங்கள் ட்விட்டரில் நிகழ்ந்து வருகின்றன. அவரின் செயல்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமே உள்ளது. குறிப்பாக, ப்ளூ டிக், ஊழியர்கள் பணி நீக்கம் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
எலான் மஸ்க்கை தொடர்ந்து சர்ச்சைகள் சுற்றிய வண்ணம் இருந்தாலும், அவர் சற்றும் ஓயாது மேலும் பல அதிர்ச்சிகர செயல்களை செய்கிறார். அந்தவகையில், சமீபத்தில் சி.என்.என், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ், தி இண்டிபெண்டன்ட் உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை எலான் மஸ்க் முடக்கினார்.
இதனால் எலான் மஸக்கிற்கு பல தரப்புகளிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதைத்தொடர்ந்து, ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங், ‘ட்விட்டர் நிறுவனத்தின் இதுபோன்ற செயல்பாடுகள் மன உளைச்சலை தருவதாக’ தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் ஒன்றை பதிவிட்டார். அதில், “நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? உங்கள் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று தெரிவிக்கப்பட்டு, ஆம், இல்லை என்ற தெரிவுகள் தரப்பட்டன.
இதற்கு, 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.5 சதவிகிதம் பேர் ‘இல்லை’ என்றும் பதிலளித்துள்ளனர்.
வாரிசு படத்தின் ‘அம்மா’ பாடல்; வெளியான முன்னோட்ட வீடியோ!