நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள கெர்மாடெக் தீவுகள் பகுதியில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது. மேலும், நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிப்பு; வலுக்கும் எதிர்ப்பு!