Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஈரானில் நிலநடுக்கம்; 7 பேர் பலி

    ஈரானில் நிலநடுக்கம்; 7 பேர் பலி

    ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஈரான் – துருக்கி எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள கோய் நகரில் கடந்த 28-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 9:44 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவானது. 

    இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், கோய் நகருக்கு தென்-தென்மேற்காக 14 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. 

    மேலும், இந்த நிலநடுக்கம் ஈரான்-துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள ஈரானின் மேற்கு அஜர்பைஜான் நகரின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 400-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கட்டடம் இடிக்கும் பொழுது நேர்ந்த விபத்தில் பெண் பலி; ஒப்பந்ததாரர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....