ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஈரான் – துருக்கி எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள கோய் நகரில் கடந்த 28-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 9:44 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், கோய் நகருக்கு தென்-தென்மேற்காக 14 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் ஈரான்-துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள ஈரானின் மேற்கு அஜர்பைஜான் நகரின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 400-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்டடம் இடிக்கும் பொழுது நேர்ந்த விபத்தில் பெண் பலி; ஒப்பந்ததாரர் கைது