அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 2.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கு 233 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பு, இம்மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் 20 முறைக்கும் மேலாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்தமானில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்!