ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜூலை 19ம் காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூர் நகரின் தெற்கே 137 கி.மீ தொலைவில் கடந்த ஜூலை 19ம் தேதி காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 170 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூர் நகரின் தெற்கே ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, ஜூன் மாதம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு