நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியபோது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் படித்த பள்ளியில், அவர் இலவச மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கடுப்பாகி பேச்சை முடித்துக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன், 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால் மலரும் நினைவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நீண்ட நேரமாக நின்றே காத்துக்கொண்டிருந்தார். பிறகு, மின் இணைப்பு வராததால் கடுப்பான அமைச்சர் துரைமுருகன், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர் அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து உடனே சென்று விட்டார்.
இதை தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் பேசியபோது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காட்பாடி தாரப்படவேடு பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் சிவக்குமார், கருணாநிதி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய கட்சியை துவங்கும் சந்திரசேகர ராவ்.. பாஜகவிற்கு ‘செக்’ வைக்க அடுத்த பிளான்