கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒக்கேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது
கர்நாடக அணைகளில் கடந்த சில வாரங்களாகவே அதிக நீர்வரத்து காணப்பட்டது. பருவ மழை குறைந்ததால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று (ஆகஸ்ட் 17) புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒக்கேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
அதிக நீர்வரத்தின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கி இருந்த பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் தற்போது வெளியே தெரிகின்றன.
மேலும், ஒக்கேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒக்கேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒக்கேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க 38-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா தொற்று