தமிழகத்தில் புயல் மற்றும் கனமழை பெய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு 11.30 மணி அளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது.
இதனிடையே மணிக்கு 15 கிலோ மீட்டராக இருந்த புயலின் வேகம் தற்போது மணிக்கு 6 கிலோ மீட்டராக குறைந்துள்ளது.
மாண்டஸ் புயலில் வட தமிழகம் புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் மற்றும் நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடரை இழந்த இந்திய அணி; காயத்தை பொருட்படுத்தா ரோஹித் சர்மா..