உருவபொம்மை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடலூரில் அண்ணாமலையின் உருவபொம்மையை தெருவில் திமுக தொண்டர்கள் இழுத்து சென்றனர். இதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அண்ணாமலையின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவப்படம், உருவ பொம்மையை திமுகவினர் காலணிகளால் அடித்து தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில்,
போலி இந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் முதல்-அமைச்சர் நவ.4-ம் தேதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன்.
மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக தெறிந்துவிட்டது. கோவை கார் குண்டு வெடிப்பு குறித்து வாய் திறக்க முதல்-அமைச்சர் யோசிக்கிறார். முஸ்லீம்கள் ஓட்டு வராது என்றெண்ணி ஓட்டுக்காக இச்சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்.
எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவரை பேச சொல்லுங்கள்; அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும்
இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.
Instead of DMK cadres wasting time by parading & burning my effigies, request them to ask their @arivalayam party President & @CMOTamilnadu to speak about the #CoimbatoreBlast!
That will be a genuine service to the people of Tamil Nadu. (1/2) pic.twitter.com/jb8u4DgLT4
— K.Annamalai (@annamalai_k) October 28, 2022
இதையும் படிங்க: ‘காண்டம்’ , ‘உண்மையான டாக்டரா’,’வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா’: கஸ்தூரி-ஷர்மிளா கருத்து மோதலால் ஏற்பட்ட சர்ச்சை