திமுக அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு இருந்து வருகிறார். இவரது உடன்பிறந்த அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தேவராஜ், நேற்று திடீரென யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து, விரைந்து வந்த காவல்துறையினர், தேவராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தேவராஜ், கடந்த சில நாட்களாகவே கடுமையான வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இவரின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.