நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக உறுப்பினர்களான தொண்டர்களே சில இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.
வருகின்ற 19-ம் தேதி நடைபெறவிருக்கின்றது. சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணிகள் அமைத்த காங்கிரஸ், விசிக,மதிமுக போன்ற கட்சிகளுடன் ஏற்பட்ட கூட்டணிகளையே, திமுக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்ந்து வருகிறது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்கவில்லை என கூட்டணி கட்சிகளே அரசல் புரசலாக திமுக மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இன்னும் சில இடங்களில் திமுக தொண்டர்களே கழகத்தின் மீது புகார்களை தெரிவித்து வருகின்றனர். கட்சிக்காக பல்லாண்டு காலமாக அடிமட்டத்திலிருந்து பணியாற்றியவர்களை ஒதுக்கி புதிதாக வரும் நபர்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடஒதுக்கீடு ஏற்படுத்தியுள்ளதாக கட்சி மேலிடம் மேல் கோபங்கொண்டுள்ளனர். இதனால் கட்சிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே சில இடங்களில் திமுக உறுப்பினர்களே, திமுக வையும் அதன் கூட்டணி கட்சிகளையும் எதிர்த்து தனித்து போட்டி இடுகின்றனர். கட்சிகளுக்கும் இருக்கும் பலரும் தனித்து போட்டியிடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அந்த தொகுதிகளில் தொண்டாற்றவும், வாக்கு சேகரிக்கவும் யாரும் முன்வருவதில்லை. அந்த தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடவும் அபாயம் உள்ளதால் கட்சி மேலிடம் கலக்கமடைந்துள்ளது.
கட்சி பிளவுபட்டிருப்பதாக மக்களிடையே பேசப்பட்டு வரும் நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுக கட்சியிலிருந்து 56 பேரை தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவதால், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.