தமிழகத்தில் அரசியலை நேர்கொண்ட பார்வையாக பார்ப்பவராகவும், மக்கள் மனதில் மாற்று தலைவராக உருவெடுத்து வரும் பாமக கட்சியின் பெருந்தலைவர் ராமதாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறப்புக் கட்டுரையாக காணலாம்
பிறப்பு & கல்வி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவிரி என்னும் ஊரில் 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி, ராமதாஸ் அவர்கள் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவராயக் கவுண்டர், தாயார் நவநீத அம்மாள் ஆவார்.
மருத்துவம் பயின்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற ராமதாஸ், 1967 ஆம் ஆண்டில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கினார். இவரது உடன் பிறந்தோர் நான்கு பேர். மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதிரி ஆவர். இவர் சரஸ்வதி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஸ்ரீகாந்தி, மற்றும் கவிதா என இரண்டு மகள்களும், அன்புமணி என்னும் ஒரு மகனும் உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி
ராமதாஸ் 1980இல் தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1990இல் இந்த வன்னியர் சங்கம் என்பது, ‘பாட்டாளி மக்கள் கட்சி’ என்னும் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
இவர் மது விலக்கிற்காகவும் தமிழக மக்களின் மீது திணிக்கப்படும் மது மற்றும் அதன் கேடுகளில் இருந்து விடுவிக்கவும் கடந்த 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார்.
குரல்கள்
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக கல்வி வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். மேலும், தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவரும் இவரே.
இதற்காக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர். தமிழை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை நிறுவியவர். பசுமைத் தாயகம் என்னும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார்.
தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 1 2020 இல் சென்னையில் போராட்டம் நடத்தினார்.
அரசியல் களம்
தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் பாமக 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. மக்களுக்கு நலதிட்டங்கைளை வழங்கிடவும், நல்லாட்சி புரிந்திடவும் தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் ராமதாஸ் அவர்கள் முன்னிலையில் பாமக போட்டியிட்டு வருகின்றது.
இப்பொழுது நடைபெறவிருக்கின்ற நகராட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடுகின்றது.
இதே போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வெற்றி பெற்று நம் அன்பு தலைவர் ராமதாஸ் அவர்கள் முதல் அமைச்சர் ஆவார் என்று தமிழக மக்கள் அந்த பொன்னான நாளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.