அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையிலேயே சால்வை அணிவிப்பது தொடர்பான ஒரு பஞ்சாயத்து தாம்பரத்தில் நடைபெற்றுள்ளது. தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது நேராக அமைச்சரை நோக்கி வந்த ஒரு திமுக பிரமுகர் கையில் வைத்திருந்த சால்வையை மா.சு.வுக்கு அணிவித்துவிட்டு மற்றொரு சால்வையை தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவுக்கு அணிவித்தார். இதைப் பார்த்த தாம்பரம் துணை மேயர் காமராஜ், சுரேஷ், சுரேஷ் என அந்தக் கூட்டத்திலும் அந்த பிரமுகரை உரிமையாக அழைத்து, ”அதென்னப்பா அவருக்கு மட்டும் சால்வை, இன்னொரு எம்.எல்.ஏ. இருக்காரு, மேயர் இருக்காங்க, நான் இருக்கிறேன், எங்களுக்கெல்லாம் கிடையாதா” என சிரித்துக்கொண்டே வினவினார்.
இதற்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் சால்வை அணிவித்த திமுக பிரமுகர் சுரேஷ் அதை கவனிக்காதது போல் நடந்து சென்றார்.”மாநகராட்சி அலுவலகம் பக்கம் நீ வந்து தானே ஆகனும், அப்ப வச்சுக்கிறேன் உன்னை” என மீண்டும் தாம்பரம் துணை மேயர் உரிமையுடன் அந்த நபரிடம் கூறினார்.
இந்த உரையாடல் அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்றாலும் கூட அதை அவர் கவனிக்காததை போல் கேட்டும் கேட்காததை போல் விறுவிறுவென நடையைக் கட்டினார். திமுகவில் இது போன்ற உரையாடல்கள் உரிமையுடன் நடைபெறுவதை பல இடங்களில் தற்போது காணமுடிகிறது.
இந்தியா முழுவதும் நடைபெறும் கலவரம்.. என்ன காரணம்??