திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் டிசம்பர் 01 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ,தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும்.
அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நவம்-26 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி; பள்ளிக்கல்வித்துறை முடிவு