இயக்குநர் ரஞ்சித் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினையைப் பேசினால் போதும் என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி, இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, ‘பகாசூரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பகாசூரன் திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது அறிவிக்கப்பட்டு, அதற்கான புரோமஷன் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட இயக்குநர் மோகன்.ஜி பா.ரஞ்சித் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, ‘பா.ரஞ்சித் தன் மக்களுக்கான உரிமையைப் பேசுகிறார். அது எனக்குப் பிடித்திருக்கிறது. சார்பட்டாவிலேயே தான் சிறந்த கலைஞர் என நிரூபித்துவிட்டார். இன்னும் அவர் பெரிய இடத்திற்கு போவார். ஆனால், நான் திரௌபதி எடுத்த காரணத்திற்காக ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை எடுத்தார். இந்த மாதிரி தடம் மாற வேண்டாம். அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினையைப் பேசினால் போதும் என நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
காதலர் தினம் கொண்டாட சென்ற ஜோடி பலி – கோவாவில் அதிர்ச்சி!