ஆதி-அறிவழகன் இருவரும் 13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் படத்திற்கு சப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம், ஈரம். இத்திரைப்படத்தில் ஆதி நடித்திருந்தார். மிகச் சிறந்த திரில்லர் திரைப்படமான உருவான ஈரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து, அறிவழகன் இயக்கிய வல்லினம் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளருக்கு தேசிய விருது கிடைத்தது.
இதன்பின்பு, அறிவழகன் இயக்கிய ஆறாது சினம், குற்றம் 23 போன்ற திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஹாரர் – திரில்லர் திரைப்படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தில், ஈரம் திரைப்படத்தில் நடித்த ஆதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆதி-அறிவழகன் இருவரும் 13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இப்படத்திற்கு தற்போது ‘சப்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஈரம் படத்திற்கு இசையமைத்த தமன் இசையமைக்கிறார். இயக்குநர் அறிவழகனே இப்படத்தை தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எதையும் வாங்காதீர்கள்..பணத்தை சேமியுங்கள்’ – அறிவுரை கூறிய உலக பணக்காரர்…