சென்னை: அதிமுக சார்பில் வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் விழாவிற்கான அழைப்பிதழில் தெரிவித்துள்ளதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், வருகின்ற 19.12.2022 – திங்கட் கிழமை மாலை 5 மணியளவில், சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள் என தலைமைக் கழகத்தின் சார்பில் 7.12.2022 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள், தோழமை கிறிஸ்தவ தலைவர்கள், அருட்தந்தையர், அருட்சகோதரிகள், கிறிஸ்தவப் பெருமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகப் பொறுப்புகளில் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு, கிறிஸ்துமஸ் கால அன்பைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை; தமிழக அரசு